Jan 21, 2010

ஈகோ புடிச்ச ராட்சசிக்காக....

நான் பல்வேறு சமயங்களில் கிறுக்கிய வரிகள்...
இது கவிதையா என்னாநெல்லாம் எனக்கு தெரியாது.....நம்ம ஆளு குசி படத்துல வர்ற ஜோ மாதிரி கொஞ்சம் ஈகோ புடிச்ச ராட்சசி....அவள கூல் பண்ண அப்ப, அப்ப கொஞ்சம் இந்த மாதிரி எடுத்து விடுறது.....அப்பறம் கொஞ்சம் மப்பு கவிதைகள்....

1.   என் கனவுகள் தடுக்கி விழுந்த,
     அந்த இடத்தில்தான்....
      உன்னை கண்டெடுத்தேன்.!
 
 
2. தேடி,ஓடி,தியானித்து,
    நாவரண்டு,
    உன்னிடம்கண்டேன்....
    எனக்கான கடவுளை !!!


3. யார், யாரோ...ஏறி ,ஏறி ...இறங்கிய,
   ரயில் வண்டி என் மனது....
   என்னுள் முதலில் பதிவு செய்து ,
   கடைசி நிறுத்தம்வரை வரும் .....
  முதல் பயணி நீ மட்டும் தன் !!!

 
4.உன் இதயத்திலா கட்டி வைத்திருக்கிறாய் என் காதலை ???
  உலகமெங்கிலும் சுற்றினாலும்....
  உன்னைமட்டுமே சுற்றி, சுற்றி வருகிறதே  என் மனது !!!
  செக்கு மாட்டை போல் .......

 
5.உன் வாசம் எங்கெல்லாம் இருக்கிறதோ ,
  அங்கெல்லாம் என் மனது....
  உன்னை மட்டும் சரியாய் கண்டுகொள்கிறது....
  அந்த பெண்ணைப்பற்றி எனக்கு கவலையில்லை.....

 
6.நீ என் அருகினில் இருக்கும் போது கூட,
  என் நிகழ்வுகளும் கற்பனையாகி போகிறது.....
  உன்னை என் கனவில் மட்டுமே கண்டிருப்பதால்......


மப்பு கவிதைகள்.....

குடி...


குடி, என் முகமூடியை சிதற வைக்க...

நானே வைத்துக்கொள்ளும் வெடி ....


பெண்ணுரிமையாம் பெண்ணுரிமை ^


உன் உணவுக்காக வில் ஏந்தினேன் அன்று ....

உன் காதலுக்காக மற்போர் புரிந்தேன் அன்று ....

உன் கற்பை காக்க உயிர் திறந்தேன் அன்று .....

நீயும் அமைதியாகத்தான் இருந்தாய் " ஐடி " கம்பனியில் வேலை கிடைக்கும்வரை .....இன்று ....


கவிஞன்.....


போதையும்,பேதையும், பற்றி முழுதும் அறியாதவன்

கவிஞன் இல்லை .....

நடிப்பவன் நடிகன், உணர்பவன் மனிதன் ......

வைரமுத்து நடிகன் ....

கண்ணதாசன் மனிதன் .....

பட்டவனுக்கு தானே வலியும் ,தப்பிக்க வழியும் தெரியும் ....

பெற்றவளுக்கு தானே வலியும் ,குழந்தையின் மொழியும் புரியும்...

பொய் காதலி 0


நான் சந்தி பிழை .....
நீ சந்ததி பிழை ....
உணர்ந்தபோதுதான் அறிந்தேன் என் பிழை .....

காதலி !!!!!!


குவாண்டம் தியரி எழுதும் நான் .....
குழந்தையாகிறேன் உன்னிடம் .....


By...தம்பி

0 comments:

Post a Comment