Dec 31, 2009

NEW YEAR SPECIAL 2 HOT DRINKS ( Chilli Punch & Cocktail )- செய்முறை

புத்தாண்டு தொடங்க போகுது, கண்டிப்பா ட்ரிங்க்ஸ் பார்ட்டி இருக்கும், எத்தன நாளக்கிதான் வழக்கமான சரக்கையே அடிக்கிறது, நம்ம வசதிக்கு  5 Star ஹோட்டல் பாரெல்லாம் தாங்காது, அப்படின்னு பொலம்பிக்கிட்டு இருக்க என்னை போன்ற குடிகார நண்பர்களுக்கு புத்தாண்டு பரிசா... 5 Star ஹோட்டல்கள்ல 1 Peg ,700, 800 ரூபாய்க்கு விற்க்கபடுகிற  2 Special Drinks ஓட  செய்முறையை சொல்லித்தரபோரேன் .......

1. Chilli Punch. .......( 1 குவாட்டருக்கனது )தேவையான பொருட்கள் :




Otka 1 quater,
எலுமிச்சை பழம்-1,
பட்ச மிளகாய் -1,
Ice Qube - 5,
உப்பு - அரை Tea Spoon.
1/2 Litter சோடா-1 Bottle

 செய் முறை :

எலுமிச்சை பழத்த சரி பாதியா வெட்டிக்கண்க, பட்ச மிளகாய இரண்டு முனையையும் வெட்டிவிட்டு ரெண்டு பாதியா வெட்டி, நடவுல கீறிக்காங்க,அடுத்து ஒரு பாதி எலுமிச்சை பழத்த Glass ல பிழிஞ்சி , அதுல வெட்டி வச்சிருக்க மிளகாயின் ஒரு துண்ட போடுங்க, அதுல கட்டிங் Otka வ ஊத்தி, அதுக்கு மேல Soda வ ஊத்தி,Ice Qube போட்டு, உப்பு கொஞ்சமா போட்டு,நல்லா கலக்கி, Taste பண்ணி பாருங்க, உப்பு பத்தலனா,இன்னும் கொஞ்சம் போட்டு , கலக்கி ஒரு 5 நிமிஷம் கழிச்சி குடிங்க, அடுத்த கட்டிங் க்கும், இதே முறையில செய்யுங்க, இது தான் Chilli Punch.

2.Cocktail. (.......( 1 குவாட்டருக்கனது )

தேவையான பொருட்கள் :

1.Wisky, or Brandy, or Rum, இதுல ஏதாவது ஒரு சரக்குல 3 or 4 Brands,உதாரணமா Brandy ன்ன Nepolian, Mecdowls,Cardinal,Goalgonda இந்த மாதிரி, 4 Quater, Brand ஒங்க லெவலுக்கு தகுந்த மாதிரி..
2.Froot Squace -3 or 4 Varities( Orange,Pineapple,Mango,Apple ) இது எல்லா சூப்பர் Market ளையும் கிடைக்கும் ...
3. தூள் Ice - 1 Glass..

செய் முறை :

Glass ல 4 Brand ளையும் ( 25+25+25+25 = Cutting ) சேர்த்து ஒரு Cutting ஊத்திகாங்க, அதுல
 உதாரணமா , 3 verity Squace னா, Quater மூடில, ஒவ்வொரு Squace ளையும், முக்கா, முக்கா மூடி ஊத்திக்காங்க, இதுவே அரை Glass வந்துரும், பாக்கி அரை Glass ல தூள் பண்ணி வச்சிருக்க Ice அ போட்டு நல்ல குலுக்குங்க.....இதுதான் Cocktail.
நல்லா குலுக்குறதுக்கு Silver Glass ஈசியா இருக்கும் , சரக்கு உள்ள Glass அ விட   வாய்  அகண்ட Glass அ மேலவட்சி, குலுக்குங்க சுலபமா இருக்கும்,
Glass க்கு  மேல வட்டமா வெட்டுன எலுமிச்சம் பழத்த சொருகி Decorate பன்னுனிங்கான ரிச்சா இருக்கும்...

அப்பறம் என்ன Enjoy பண்ணுங்க.....
அடுத்த வருஷம் Meet பண்ணுவோம் .......
புத்தாண்டு வாழ்த்துக்கள் ........

கருப்பு பண ரகசியங்கள் பகுதி - 2 ( அறிமுகம் )

சட்டத்துக்கு புறம்பா சம்பாதிக்கிரவர்களோட  நோக்கம் சொத்து சேக்குறது, சரி இவ்வளவு Risk எடுத்து, தொழில் துறைல முன்னணியில உள்ள ஜாம்பவான் நிறுவனங்கள் கூட எதுக்கு கருப்பு பணத்த Generate பண்ணனும்......


லஞ்சம் குடுக்குறது தான் இவங்க கருப்பு பணம் Generate பண்றதோட முக்கிய நோக்கம், பெரிய, பெரிய Contract எடுக்க நீங்க என்ன தான் சரியான விலைக்கு, Tender Submit பண்ணிருந்தாலும், லஞ்சம் குடுக்காம வேலை முடியாது, இது தனியார், மற்றும் அரசு துறைக்கும் பொருந்தும், இதன் மூலமா  தான், கோடி, கோடிய கருப்பு பணம் அரசியல் வாதிகளிடமும், முக்கிய பொருப்புகள்ள உள்ள தனி நபர்களிடமும் போய் சேருது, இதன் மூலமாதான் சிலர் ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களா  ஆனா கதை உங்கள்ளுக்கு தெரிஞ்சிருக்கும், இந்த பணம் தான் ஓட்டுக்கு இத்தனை ஆயிரம்னு குடுத்து தேர்தல்ல ஜெய்க்க உதவுது, இது மட்டுமில்லாம அரசியல் கட்சிங்களுக்கு நிதி குடுக்க, தங்கள் நிறுவனத்துக்கு சாதகமா சில அனுமதிகள் பெற ( இதற்க்கு உதாரணமா Spectrum ஊழல சொல்லலாம் ) சொத்து வாங்கும்போது அதோட மதிப்ப குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு பாதி வெள்ளை, பாதி கருப்பா குடுக்க, லோக்கல் அரசியல் வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் கப்பம் கட்ட, இந்த மாதிரி உள்குத்து வேலைகளுக்கு தான் அதிகம் பயன் படுது, இந்த மாதிரி உள்குத்து வேலைகளுக்கு உபயோகப்படுத்த படும் பணத்த ஒரு அளவுக்கு மேல கணக்கு காட்ட முடியாது, இப்ப புரிஞ்சிருக்கும் எதுக்காக கருப்பு பணம் Generate பண்ணுறாங்கனு, அவங்க பதுக்குரங்கன்றத விட, கருப்பு பணமா பதுக்க நிர்பந்திக்க படுறாங்க என்பதுதான் உண்மை.....

இப்படி கோடி, கோடியா லஞ்சமா அரசியல்வாதிகளிடம் போய் சேரும்  கருப்பு பணம் தான், சின்ன வீடு, பெரியவீடுங்களுக்கு எல்லாம் கொடுத்தது போக சுவிஸ் பேங்குளையும்,பினாமிகளிடமும் போய் சேருது.....

ஒரு உபரி தகவல், நீங்க,நானெல்லாம் நினைத்தவுடன் சுவிஸ் பேங்குல கணக்கு தொடங்க முடியாது, அதுக்கு ஆயிரம் parmalites இருக்கு, அது தவிர, ஏற்கனவே அங்க கணக்கு வச்சிருக்க ஒருவர் உங்கள அறிமுகபடுத்தனும், இந்த வேலைய செய்வதற்காகவே, மும்பை, டெல்லி போன்ற நகரங்கள்ல சில Agent டுங்க இருக்காங்க....

அடுத்து நீங்க கேள்வியே பட்டிறாத கருப்பு பண ரகசியங்களை அடுத்த பகுதில பார்போம்.......

Dec 30, 2009

கருப்பு பண ரகசியங்கள் பகுதி - 1 ( அறிமுகம் )

கருப்பு பணம், இந்த வார்த்தைய கேட்டாலே ஒரு மர்மம் கலந்த சுவராஸ்யம் இருக்கும், அதும் இல்லாம நான் குஜராத்ல வேல பாக்குறதால இத பத்தி எனக்கு நேர்முக அறிமுகம் உண்டு, இத பத்தி ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாள நெனச்சிக்கிட்டு இருந்தேன், கொஞ்சம் பெரிய பதிவா இருக்கதால இத இரண்டு பகுதியா  பிரிட்சிருக்கேன், முதல் பகுதில இத பத்திய ஒரு சின்ன அறிமுகமும், இரண்டாவது பகுதில இது சம்பந்தமான என்னோட நேரடி அனுபவத்தையும் எழுதலாம்னு இருக்கேன், கண்டிப்பா நீங்க கேள்விபடாத, சுவராஸ்யமான நெறைய விஷயங்கள் இருக்கும்......

கருப்பு பணம்னா என்ன?

இந்த வார்த்தைய, அடிக்கடி கேள்வி பட்டிருப்போம், சமீபத்துல கூட சுவிஸ் பேங்குல, இந்தியர்களோட கருப்பு பணம் 70 லட்சம் கோடி ருபாய் பதுக்கி வைக்க பட்டிருப்பது பற்றியும், அத மீட்பது பற்றியும், இந்திய அளவுல ஒரு விவாதம் எழுந்தது உங்களுக்கு தெரியும், அது மட்டுமில்லாம வருமான வரி சோதனையில இத்தனை கோடி கருப்பு பணம் சிக்கியது, அவரு இந்த சினிமா எடுத்ததே கருப்பு பணத்த மாத்த தான், அந்த முதலியார்கிட்ட இவ்வளவு கருப்பு பணம் இருக்கு, அந்த அரசியல்வாதி வருமான வரித்துறையின் ரைடுக்கு பயந்து இத்தனை கோடி பணத்த வேன்ல வச்சிக்கிட்டு சுத்துனாறு, இந்த ஹீரோ சம்பளத்த, பாதி கருப்பு, பாதி வெள்ளையா தான் வாங்குறாரு,இவருக்கு, இவருதான் பினாமி, இந்த மாதிரி கருப்பு பணம் சம்பந்த பட்ட விசயங்களை எல்லாம், ஜூவி, நக்கீரன், போன்ற புலனாய்வு பத்திரிகைகள்ள படிட்சோ, செவி வழி செய்தியாகவோ கேள்விபட்டிருப்போம்.....

சரி இப்ப கருப்பு பணம்னா என்ன, அத எப்படி Generate பண்ணுறாங்க, யார்,யார் இத செய்றாங்க, எதுக்காக செய்றாங்க இதெல்லாம் தெரிஞ்சிக்கலாம்.....

கருப்பு பணம்னா என்ன ?
கருப்பு கலர்ல இருக்குமா, இல்ல நம்மாலே பிரிண்ட் பண்ணுறதா, இதெல்லாம் இல்ல, அதுவும் நம்ம புலன்குற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணம் தான்,கருப்பு பணம்னா கணக்குல காட்டாத பணம்னு அர்த்தம், நாமே பிரிண்ட் பண்ற பணம் கருப்பு பணம் இல்ல, கள்ள நோட்டு, கருப்பு பணத்த கூட சில நடைமுறைகளுக்கு உட்பட்டு, அதற்க்கான வரிய கட்டிட்டா, அங்கீகரிக்கப்பட்ட பணமா மாற்றிவிடலாம், உதாரணமா சில வருசங்களுக்கு முன்ன கூட நம்ம சிதம்பரம்  ஐயா நிதியமைச்சரா இருந்தப்ப VDIS ( Voluntary Discloser Income Scheme ) என்கிற திட்டத்த இதுக்காக அறிமுகபடுத்துனது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், கள்ள நோட்டு அடிச்சா கம்பி தான் எண்ணனும், இந்த விஷயமெல்லாம் கூடுமானவரை உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும், இத பத்தின மேல் விவரங்களை பார்போம்.......

எதுக்காக ஞாயமா சம்பாதித்த பணத்த கணக்கு காட்டாம, கருப்பு பணமா பதுக்குறாங்க, முக்கியமா வரி ஏய்ப்பு செய்யத்தான், சில நேரம் நிர்ணயித்தத விட கூடுதலா உற்பத்தி ஆகுறது கூட காரணமா இருக்கலாம்,

நம்ம சம்பாதித்த லாபத்துல ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருமான வரியா கட்டனும்குறது அரசாங்க விதி, உதாரணமா 10 லட்சத்துக்கு 3 லட்சம் வருமான வரியா கட்டனும், வேலை பார்க்கிற நம்ம மாதிரி ஆட்களோட வருவாய் எல்லாம் இந்த 10 லட்சதுக்குள்ள அடங்கிர்றதால, அதுவும் வரி விளக்கெல்லாம் போக 1 லட்சமோ, 1.1/2 லட்சமோ கட்டுரதனால நமக்கு பெருசா எந்த பதிப்பும் எற்படுரதில்ல, இதுக்கே லபோ, திபோன்னு அடிச்சிகிரவுங்களும் உண்டு, இப்ப நீங்க ஒரு தொழில் நிறுவனம் நடத்துரிங்கனு வட்சிகங்க, உங்க நிறுவனத்தோட ஆண்டு வருமானம் 1 கோடினா, வரி 30 லட்சம், 10 கோடினா வரி 3 கோடி, 100 கோடினா வரி 30 கோடி, 1000 கோடினா 300 கோடி, இப்ப தெரியுதா பிரமாண்டம், நம்ம கஷ்ட்ட பட்டு, Risk எடுத்து சம்பாதித்த வருவாயில கிட்டத்தட்ட 50 சதவீதம், அரசாங்கத்துக்கு குடுக்கனும்னா, இப்ப சொல்லுங்க யாருக்கு மனசு வரும், அதுக்காகத்தான், இதுல ஒரு பகுதிய கணக்கு காட்டாம, கருப்பு பணமா பதுக்குறாங்க,(சரி எப்படி கணக்கு கட்டாம இருக்க முடியும், வாங்குற பொருளுக்கு பில்லு தராதது மூலமா, இத தான், முதல்வன் படத்துல சங்கர் சொல்லி இருப்பாரு, சில தில்லு முள்ளு வேலையெல்லாம் பார்த்து, உற்பத்திய குறைச்சி காட்டுறது மூலமா, செலவுகள அதிகரித்து  காட்டுறது மூலமா),   இது தவறு தான் இருந்தாலும் இவங்களோட மனநிலை எப்படி இருக்குன்னா, இதே இந்த அளவுக்கு நம்ம நிறுவனம் நஷ்டம் அடைந்தா, அரசாங்கம் நமக்கு உதவி செய்யுமா...இவங்க ஞாயமான வழியில சம்பாதிக்கிரதனால இத கூட ஏத்துக்கலாம், இது சின்ன,நடுத்தர நிறுவனங்கள்ல மட்டும் நடக்கல, தொழில் துறைல ஜாம்பவான இருக்கிற நாட்டின் முன்னணி நிறுவனங்களையும் 
இந்த கருப்பு பண பதுக்கல் நடக்குது,இது தொழில் துறை சார்ந்த கருப்பு பண பதுக்கல்......இன்னொரு வகை இருக்கு....


அது என்னன்னா, சட்டத்துக்கு புறம்பா சம்பதிகிறது, உதாரணமா அரசு அதிகாரிங்க வாங்குற லஞ்ச பணம், அரசியல்வாதிங்க செய்யற ஊழல் மூலமா சேருகிற பணம், போதை பொருள் விக்கிறது மூலமா வர்ற பணம்,இதுக்கெல்லாம், கணக்கும் காட்ட முடியாது, வரியும் கட்ட முடியாது, So, Obviously இந்த பணமெல்லாம் கருப்பு பணமா மாறுவதை தடுக்கவும் முடியாது...இந்த மாதிரி சேர்கிற கருப்பு பணத்தோட சதவீதம் தான் அதிகம் ......நம்ம அரசாங்கம் என்ன பண்ணுது,சும்மா  பேருக்கு சில, அரசியல்வதிங்களையும், அரசாங்க அலுவலர்களையும், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா கைது பண்ணுது, அதுலயும் அரசியல் ரீதியா  பலி வாங்குறது தான் முக்கிய நோக்கமா  இருக்கு..ஆனா தொழில் துறையில உள்ளவங்களுக்கு, ஆயிரம் சட்ட, திட்டம் இருக்கு...

சட்டத்துக்கு புறம்பா சம்பாதித்தவன்களோட நோக்கம் சொத்து சேக்குறது, சரி இவ்வளவு Risk எடுத்து, தொழில் துறைல முன்னணியில உள்ள ஜாம்பவான் நிறுவனங்கள் கூட எதுக்கு கருப்பு பணத்த Generate பண்ணனும்......

அது Next......





Dec 29, 2009

நீங்களும் பத்திரிக்கை அதிபர் தான்.....

ஒரு முன்னணி பத்திரிக்கைல நம்மோட விமர்சன கடிதமோ, கேள்வி பதில் பகுதிக்கான கடிதமோ, உங்கள் இடம் பகுதில இடம்பெறும், குறை தீர்க்கும் பகுதியிலோ கூட, நம்மோட கடிதங்களோ, விமர்சனங்களோ இடம் பெறுவதென்பது குதிரை கொம்பா இருக்கும் நிலையில்,
நம் படைப்புகளோ , கவிதை, கட்டுரையோ, லட்ச கணக்கானவர்களை சென்றடையும் ஒரு முன்னணி தின பத்திரிக்கையிலோ, ஒரு வார பதிரிக்கயிலோ இடம் பெற வைப்பது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நமக்கு தெரியும்......
அப்படி இடம்பெறனும்னா 2 வழி தான் இருக்கு, ஒன்னு,வருஷ கணக்கா தொடர்ந்து எழுதி, அதுல, சில படைப்புகள், அந்த முன்னணி பத்திரிக்கையோட ஆசிரியருக்கு பிடிட்சிபோய், அதிஷ்டம் இருந்தா அது பிரசரிக்க படலாம் , அப்படி இடம் பெற்ற உங்க படைப்பு, அத படிக்கிற வாசகனுக்கும் பிடிட்சிபோயிருந்தா, நீங்க தொடர்ந்து எழுத வாய்ப்பு கிடைச்சி, பிரபலமாகி, ஒரு சுஜாதா சார் மாதிரியோ, ஒரு பால குமாரன் சார் மாதிரியோ, ஒரு மதன் சார் மாதிரியோ, முன்னணி எழுத்தாளரா உருவெடுக்கலாம், இதுக்கெல்லாம் குறைந்தது ஒரு ஐந்து வருசத்தயாவது செலவளித்தாகனும்,

இல்லையா, உங்க அப்பாவோ, தாத்தாவோ, முதல்வரா இருந்து, காசு, கோடி, கோடியா குவிஞ்சி இருந்து, சரி காசுதான் கோடி, கோடியா இருக்கே, சும்மா ஒரு 200 கோடிய போட்டு கழுத, ஒரு பத்திரிக்கைய தான் ஆரம்பிபோமேனு, ஆரம்பிச்சி, நம்மக்கிட்ட உள்ள TV சேனல Use பண்ணி, செகண்டுக்கு 3 வாட்டி காது கிளியிர மாதிரி விளம்பரம் செஞ்சி, 50 காசுக்கோ, 75 காசுக்கோ அத வித்து, கூடவே, ஸ்டிக்கர் பொட்டு, சாம்பு பாக்கெட், பவுடர் டப்பா, லொட்டு, லொசுக்கு எல்லாம் Free யா குடுத்து, சரி அதுல இருக்குற செய்தியவிட, போண்டா, பக்கடா, மடிக்கிரதுக்கு வசதியா இருக்குதுன்னு நினைட்சாட்சும், என்ன மாதிரி மங்குனி பாண்டிங்க 50, 60 ஆயிரம் பேராவது வாங்க ஆரம்பிச்சி, அந்த பத்திரிக்கை பிரபலமாகி, அதுல நம்ம கருத்தையோ, படைப்பையோ, எவன் படிச்சா என்ன, படிக்காட்டி என்னன்னு, எத்தனை பக்கத்துக்கு வேணும்னாலும் எழுதிக்கலாம்......

இதெல்லாம் இல்லாம, ஒரு பைசா செலவில்லாம, Office ல சம்பளமும் வாங்கிகிட்டு, கிடைக்கிற நேரத்துல, ஒரு சொடக்குல கம்புட்டர தொறந்து, ஒரு Blog ஆரம்பிச்சி, நம்ம நெனைக்கிறத எழுதி, Tamilish, Tamil Manam மாதிரியான வலை தொகுப்புல இணைத்து, பல ஆயிரம் வாசகர்களின் பார்வைக்கு நேரடியா கொண்டு போறது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம், இப்ப சொல்லுங்க நீங்களும் ஒரு பத்திரிக்கை அதிபர் மாதிரி தானே....
இந்த வாய்ப்ப நம்ம எந்த அளவுக்கு Use பண்ணிக்கணும், அது மட்டும் இல்லாம இனி வருங்கால செய்தி தொடர்பே இந்த வலை பூக்களையும், இணையத்தையும் நம்பித்தான் இருக்க போகுது என்பது, நமக்கு கிடைத்த மிகப்பெரும் பெரிய வசதி இல்லையா, இதன் மூலம் பிரபலம் அடைந்து, ஏன் நீங்களே கூட ஒரு மிகபிரபலமான எழுத்தாளரா, சிந்தனையாளர, இந்த சமூகத்தால ஏற்றுக்கொள்ளகூடிய வாயப்பு கூட இருக்கு....
So இனி எழுதும்போது, இதெல்லாம் ஞாபகம் வட்சிகங்க, சரியோ, தப்போ, உங்களோட சொந்த கருத்த எழுதுங்க, அது கதையோ, கவிதையோ, கட்டுரையோ உங்களோட சொந்த சிந்தனையிலேர்ந்து உதிக்கட்டும், அதேமாதிரி வர்ற விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் , நல்ல பதிவுன்னு தெரிஞ்சா, அது யாரு எழுதிருந்தாலும், பாரபட்சம் பாக்காம, ஒரு 2 நிமிஷம் ஒதுக்கி, ஒட்டு போட்டு பாராட்டி ஊக்கம் குடுக்க மறக்காதிங்க.....
அதனால, நல்ல சிந்தனைகளை தூண்டுற ,உங்களுக்குனு ஒரு வாசகர் வட்டம் தோன்றுகின்ற அளவுக்கு எழுதி, எதிர்கால பிரபல எழுத்தாளர்களுக்கான பதவிக்கு, இப்பவே துண்டு போட்டு இடம் புடிச்சி வட்சிக்கங்க .....
வாழ்த்துக்கள்....................

Dec 24, 2009

எனதருமை ஈழ சகோதரா....உனக்கான "Game Plan "

" கந்தல் ஆனாலும், தாய் மடி போல் ஒரு சுகம் வருமா....வருமா....

சொர்க்கம் சென்றாலும், சொந்த ஊர் போல சுதந்திரம் வருமா....வருமா...

கண் திறந்த தேசம் அங்கே, கண் மூடும் தேசம் எங்கே ?

பிரிவோம் நதிகளே, பிழைத்தால் வருகிறோம்....

மீண்டும் தாயகம், அழைத்தால் வருகிறோம்.....

கண்ணீர் திரையில், பிறந்த மண்ணை, கடைசியாக பார்கின்றோம்.....

--------------------------------------------------------------------------------------

விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே,

பனை மர காடே, பறவைகள் கூடே, மறு முறை, ஒரு முறை, பார்ப்போமா...?

----------------------------------------------------------------------------------------

உதட்டில் புன்னகை தொலைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்....

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்......

என் ஈழ சகோதரா,கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல வர்ற இந்த பாட்ட கேட்ட, நான் சூழ்நிலைய மறந்து கதறி அழுதுவிடுவேன், உன்னை நினைத்து என்னால் தற்போது செய்ய முடிந்தது இதுதான்,

நீ எத்தனையோ இழப்புகளை சந்தித்துவிட்டாய், ஈழத்தில் உன் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஆயுதத்தை தூக்கிக்கொண்டு, கடல் கடந்து வந்து உனக்கு தோல் கொடுக்க வேண்டும் என்று எனக்கும் ( எங்களுக்கும் ) ஆசைதான்,என்ன செய்ய, எங்கள் நாடு எங்களையும் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடும் என்ற பயத்தில் ஒதுங்கி இருக்கிறோம்.....மன்னித்து விடு நாங்கள் கூட்டு குடும்பத்தில் பிறந்துவிட்டோம்....

உன் நிலையை நினைத்து கண்ணீர் விடவும், கவிதை/கட்டுரை மட்டுமே, எழுதக்கூடிய கையறு நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்,என்ன செய்ய?

நீ ,இன்னுமா எங்கள் அரசியல்வாதிகளை நம்பிகொண்டிருக்கிறாய் ? அதற்கு பதில், நீயாகவே தற்கொலை செய்துகொள்வது உத்தமம், உன் பெயரை சொல்லி, அரியணையை பிடிப்பதுதான் அவர்களின் நோக்கம், அவர்களின் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதைவிட, நீ முக்கியமில்லை...அதற்காக உங்கள் உயிர்களை முதலீடு செய்கிறார்கள், இவர்களை நம்பி நீ இழந்ததெல்லாம் போதும், இனிமேலும் உன்னை பலி கொடுக்க நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்,உன்னை கரை சேர்க்க நினைத்த "அண்ணனையும் "காணவில்லை, மீண்டும் வருவான் என்ற உன் நம்பிக்கையையும், நான் தகர்க்க விரும்பவில்லை,நல்லது நடந்தால், நானும் சந்தோசமே படுவேன்,இனி எந்த ரட்சகனும், வானிலிருந்து குதித்து வந்து உன்னை காப்பாற்ற வரபோவதில்லை என்பதை நீயும் அறிவாய்.....

பிறகு என்னதான் நாங்கள் செய்வது, இப்படி மடிவதையும், நாடு விட்டு, நாடு ஓடிக்கொண்டு இருப்பதையும் தவிர, எங்களுக்கு வேறு மார்க்கமே இல்லையா ? என்று நீ கேட்க நினைபதையும் நான் அறியாதவன் அல்ல...

பொருத்தது போதும், பொங்கி எழு என்று உன்னை உசுப்பேற்ற வரவில்லை நான், பொறுமையை கையில் எடு, கொஞ்சம் பொறுத்திரு என்றுதான் சொல்ல வந்தேன்


நீ யார் தெரியுமா? கல் தோன்றி, மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய, மூத்த குடியில் பிறந்தவன், உலகுக்கே வழிகாட்டிய நாகரீகாதிலிருந்து வந்தவன், உன்னை மிஞ்ச இந்த உலகத்தில் ஒரு இனம் இல்லை, உன் அறிவுக்கு நிகரான எந்த மனித இனமும் இல்லை, இத்தனை சிறப்பு பெற்ற நீ, ஏன் அறிவை உபயோகித்து எதிரியை வெல்ல கூடாது?

சத்ரியன் உன் நெஞ்சிக்குள் இருக்கட்டும்,உன் சாணக்கிய தனத்தை கொஞ்சம் வெளிக்காட்டு, உன்னை மிஞ்சிய அரசியல் ஞானம் பெற்றவன் எவனும் இல்லை என்பதை நிருபி, எதிரிக்கு கொஞ்சம் அரசியல் விளையாட்டை காட்டு என்று சொல்லவருகிறேன்,

நீ எத்தனையோ அயல் நாடுகளில் பரவி, பெரிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருகின்றாய் உன் பொருளாதார நிலையும் நன்றாகவே இருக்கிறது ,

நீ செய்ய வேண்டியது இது தான், எல்லா நாடுகளிலும் உள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்கு, ஈழ மீட்ட்புக்கான அணைத்து நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு தீர்மானிக்கட்டும்,உங்களின் இறுதி இலக்கு தமிழீழ விடுதலையாக இருக்கட்டும்,

செய்ய வேண்டிய பணிகள் இலங்கைக்கு வெளியே :

நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வை, உங்களின் ஒவ்வொருவருடைய பொருளாதார முனேற்றமும் முதன்மையாக இருக்கட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதன் பொருட்டு ஈழ வங்கி ஒன்றை தொடங்கு,உங்களின், சேமிப்பும்,முதலீடுகலும், அதன் மூலமாக நடைபெறட்டும், அதை மற்ற இடங்களிலும், விரிவு படுத்து, உங்கள் எல்லோருடைய பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக அது இருக்கட்டும், அடுத்து உங்கள் குழந்தைகளின் கல்விதரம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்படி பார்த்துகொள்,அவர்கள் நாளைய உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள இது உதவும், இவை இரண்டிலும் நீ பலம் பெற்றுவிட்டால், உன் தனி ஈழ கனவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக அர்த்தம், அடுத்து அரசியல் நீ குடியேறி இருக்கும் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பில் குறிப்பிட்ட பதவிகளிலும், நிலைகளிலும் இடம்பெறுமாறு காய்களை நகர்த்து, இவை எல்லாவற்றிற்கும் உங்கள் உலகம் தழுவிய ஒற்றுமை முக்கியம் இதை நன்றாக நினைவில் வை.......

ஈழத்தில் செய்ய வேண்டிய பணிகள் :

ஈழ வங்கியின் வருவாயின் ஒரு பகுதி,ஈழத்தில் உள்ள வறியவர்களின் உணவுக்கும், முக்கியமாக சிறப்பான கல்விக்கும், உன் சகோதர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும், மருத்துவத்திற்கும் உதவட்டும்,உன் சகோதரன் உள்நாட்டு அரசியல் அமைப்புகளில் உயர்ந்த நிலைகளை அடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும்,செய், உள்நாட்டு அரசியலை கூர்ந்து கவனித்து, எடுக்க வேண்டிய அரசியல் முடிவுகளையும், செயல் பாடுகளையும் மேற்குறிய அமைப்பு முடிவு செய்யட்டும், உள்நாட்டு அரசியலில் அழுத்தமாக காலுன்ற வேண்டியது அதி முக்கியம், உன் ஒவொரு அசைவும், இலங்கையின் உள்நாட்டு அரசியலை,அசைதுப்பாற்பதாக இருக்கட்டும்,

ஈழ மக்களின் வாழ்க்கைதரம் உயர உயர, நம்பிக்கை வரும்,இப்பொது தொடங்கு உன் தாக்குதலை, வன்முறை வழியில் இல்லை, அரசியல் ரீதியாக அது இருக்கட்டும், வேறு வழியே இல்லாமல் எதிரிகள் உன் காலடியில் வந்து பனியும் படி செய் ---உன் தமிழ் ஈழ கனவு, நனவாக வந்து அமையும்.....

இதற்கான காலக்கெடு " 20 " வருடங்களாக நிர்ணயித்துகொள்,இந்த இருபது வருடங்களில்,உன் அரசியல்வழி தாக்குதளுக்கான ஆயத்த பணிகள் மறைமுகமாக நடந்துகொண்டே இருக்கட்டும், தீராத தமிழ் ஈழ கனவு உன் நெஞ்சில் அனலாய் கொதித்துகொண்டே இருக்கட்டும், நாளைய புதிய தலைமுறைகளின் செயல்பாடுகளில், எதிரிகளின் கூடாரம் தூள்,தூள் ஆகட்டும்,அதேநேரத்தில் நாங்களும் வல்லரசு ஆகி இருப்போம்,எங்களுக்கும் மற்ற நாடுகளை ஆட்டிவைக்கும் பலம் வந்திருக்கும், உனக்கு முழுவதுமாய் கைகொடுப்பதை தடுக்க, அப்போது எந்த அந்நிய சக்திக்கும் துணிவு இருக்காது, நாம் இருவரும் சேர்ந்து ஆயுதமில்லா இறுதி தாக்குதலை தொடுத்து தமிழ் ஈழத்தை மீட்டெடுப்போம்.........

ஓட,ஓட விரட்டிகொள்ளப்பட்ட, உலகமெங்கும் விரட்டப்பட்ட யூதர்களின் கனவு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு நிறைவேறியது உனக்கு ஞாபகம் இல்லையா ? சகோதரா......

ஏன் உன்னால் முடியாது ?....நமக்கு வெறும் இருபது வருடங்கள் தானே......

ஆரம்பமாகட்டும் நம் அடுத்த கட்ட இறுதி போருக்கான ஆயத்தம், ஆதி பராசக்தி நமக்கு துணையிருப்பாள் .......வெற்றி நமதே.....

புரட்சிக்கான வித்தை இட்டுவிட்டேன், இனி புரட்சி மட்டும்தான் பாக்கி

"என் பாரதி சொன்னபடி,

" அக்கினி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கே ஓர் காட்டிடை பொந்தினில் வைத்தேன், வெந்து தணியட்டும் காடு ......

வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.......

( தமிழ் நாட்டிலிருந்து உன் அன்பு தம்பி )

Dec 23, 2009

பிரபல பதிவர் ஆவது So Simple...( Easy Formula )

இது பதிவு எழுதிட்டு , என்னடா எவனுமே ஓட்டே போடமாட்டன்றாங்க, என்ற வெறுப்புல, மண்டைய பிச்சிக்கிட்டு, என்னடா பிரபலங்க என்ன குப்பய எழுதுனாலும் ஓட்ட போடுறாங்க, அப்ப நம்மெல்லாம் வேஸ்டா, நம்மளுக்கு கற்பனை வளமே இல்லையா ? அப்படின்னு தன்னால பொலம்பிகிட்டு, நம்ம என்ன எழுதுனா ஒட்டு போடுவாங்க, அப்படின்னு நைட்டு ஒரு கோட்டாறு +கட்டிங் அடிச்சிட்டு மப்புல, மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சி,யோசிச்சி, புதுசு,புதுசா Subject புடுச்சி, பதிவு எழுதி,எழுதி முயற்சித்து கொண்டே இருக்கும் பதிவர்களுக்கானது.......
எல்லோருமே ஒரு அங்கீகாரத்துக்காக ஏங்குபவர்கள் தான், அதனாலதான் தாங்கள் எழுதுனத ஓட்டுக்காக இந்த வலைபூ தொகுப்பு முன் வக்கிறாங்க, நீங்க, நான், எல்லோருமே.....
இதுல ஒட்டு வாங்க ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்கு, அதவிடுங்க,
ஒட்டு கிடைக்கலேன்னா, ஒங்க பதிவு நல்லா இல்லேன்னு அர்த்தம் இல்ல, உங்களுக்கு கற்பனை வளம் இல்லனும் அர்த்தமில்ல,நீங்களே நாளைக்கு பெரிய எழுத்தாளரா அங்கீகரிக்க படலாம், உங்க படைப்புகள் கூட நாளைய உலக இலக்கியத்தில் இடம் பெறலாம், So உங்க எழுத்து மீதும், கருத்துக்கள் மீதும் நம்பிக்கை இருக்கும் வரை, முயற்சி செஞ்சிகிட்டே இருங்க... இதுலயும் திருப்தி இல்லையா.....
சரி அப்படின, இப்படி விஜயகாந்த் ஸ்டைல்ல யோசிச்சி பாப்போம்,
தமிழ் நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு சுமாரா -6.5 கோடி,
இதுல படிச்சவுங்க எத்தனை பேர் சுமாரா - 4.5 கோடி,
இதுல கம்ப்யுட்டர் அறிவு பெற்றவுங்க சுமாரா - 2 கோடி,
இதுல அரசாங்க, மற்றும் வங்கி ஊழியர் எத்தனை பேர் ( அரசாங்க வேலைல OB அடிக்கத்தான் முடியும், இஷ்டத்துக்கு Browse எல்லாம் பண்ண முடியாது ) சுமாரா -1.5 கோடி,
இதே போல Private கம்பெனில அவுங்க இஷ்டத்துக்கு Brows பண்ண முடியாதவங்க எத்தனை பேர் சுமாரா -25 லட்சம்,
ரகசியமா Sex Site மட்டும் பாக்குறவுங்க எத்தனை பேர் சுமாரா -18 லட்சம்,
பாக்கி -7 லட்சம், இதுல Face Book,Orkut,Chatting,Online Games இப்படி போறவுங்க சுமாரா - 6.5 லட்சம்,
பாக்கி 50 ஆயிரம் பேர் , இதுல நெட்டுல, தின தந்தி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், அப்பறம் Matrimonial இப்படி மட்டும் பாக்குறவங்க சுமாரா - 41 ஆயிரம், பாக்கி -9 ஆயிரம், பிளஸ் இலங்கை தமிழர்கள் - 5 ஆயிரம் பேர், பாக்கி மொத்தம் சுமாரா - 14 ஆயிரம் பேர்,
Tamilish, Tamil Manam, இந்த மாறி வலைபூக்களை தொகுத்து தருகிற தளங்கள் மட்டும் சுமாரா 7,8 இருக்கு, பாக்கி உள்ள இந்த -14 ஆயிரம் பேர் தான், இந்த 7,8 தளங்களையும் படிக்கிறவங்க,
இந்த 7,8 தளங்களுக்கும் தோராய ஒரு நாளைக்கு வரும் வாசகர்கள் சுமாரா - 2.5 ஆயிரம்,
இதுல எந்த தளத்தில ஒங்க பதிவ இணைக்கிறிங்க, நான் Tamilish, இந்த -
2.5 ஆயிரம் பேர்லயும், சும்மா பொழுது போக்குறதுக்காக படிக்கிறவங்க சுமார 2.4 ஆயிரம் பேர்,
பாக்கி -100 பேர் இந்த நூறு பேரு தான் டீப்பா படிச்சி ஒட்டு போடுறவங்க, இந்த 100 பேர்ல, அவுங்க, அவுங்க Group க்கு மட்டும் ஒட்டு போடுறவங்க - 80 பேர் ( இவங்க மற்றவங்க பதிவ படிக்க மாட்டாங்க, ஒங்க பதிவு அவங்களுக்கு புடிச்சிருந்தாலும் உங்களுக்கு ஒட்டு போடா மாட்டாங்க ), So இவிங்கள கணக்குல எடுக்காதிங்க
பாக்கி உள்ளவங்க 20 பேர், முதல்ல இவங்க கண்ணுல ஒங்க பதிவு மாட்டனும், அந்த செகண்ட்ல அவுங்க என்ன மூடுல இருக்காங்களோ, அதோட ஒங்க பதிவோட கருத்து ஒத்து போகணும், So இவங்க போடுற - 2,3 ஒட்டு கடைசிட்டாலே, நீங்க ஜெயித்துடீங்கனு அர்த்தம், So ஓட்ட பத்தி யோசிக்காம, எழுதிக்கிட்டே இருங்க ....
அதெல்லாம் முடியாது, நானும் பிரபல பதிவர்கள் மாதுரி -25 - 30 ஒட்டு வாங்கி பிரபல பதிவர ஆகணும்னு அடம் புடிட்சிங்கான, அதுக்கும் ஐடியா இருக்கு...
ஐடியா நம்பர் 1, -
ஒரு 20-25 பிரபலங்கள புடிச்சி வச்சிக்கங்க, அவங்க என்ன எழுதினாலும், ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து பின்னூட்டம் போடுங்க, மறக்காம " கலக்கிட்ட தல " , " சூப்பர் அண்ணா " இந்த மாறி வார்த்தையெல்லாம் கண்டிப்பா Use பண்ணனும்,ஆரம்பத்துல கண்டுக்க மாட்டாங்க , ஒரு ஆறு மாசம் இதையே Follow பண்ணுங்க, போன போகுதுன்னு அவிங்க க்ரூப்ல சேத்துக்குவாங்க, அப்பறம் பாருங்க, நீங்களும் பிரபலம் தான்.....
ஐடியா நம்பர் 2, -
பெண்பால் பெயர்ல பதிவு எழுதுங்க, அதே பேர்ல மேல சொன்னமாதுரி பின்னூட்டம் போடுங்க, ஒங்களுக்கு Quick Response கிடைக்கும், இந்த ஐடியாவ Follow பண்ணா, உங்கள , ஒரே மாசத்துல பிரபலமாக்கிடுவாங்க, ஒரு வேலை கண்டு புடிசிட்டாங்கனா , சுஜாதா Sir மாதுரி, புனை பெயர்ல எழுதுனேன்னு அடிச்சி உடுங்க....
That's All ........

Dec 21, 2009

அபுவாகிய நான் பிராமணனாக பிறக்க ஆசை படுகிறேன்............

பிராமணர்கள்,
இந்த வார்த்தையும், இவர்களையும், நான் காதலித்து கொண்டே தான் இருக்கிறேன், இந்த காதலுக்கான காரணம் இதுவாக கூட இருக்க்லாம்......

எங்கள் ஊர் மன்னார்குடியை பொறுத்தவரை, பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்,இப்பொது இதில் நிறைய பிராமணர்கள்,பணிநிமிர்தமாகவோ,தொழில் நிமிர்தமாகவோ,வெளியேறி வெளி மாநிலங்களிலும்,வெளி நாடுகளிலும் குடியேறி விட்டார்கள், அவர்களில் பெரும்பாலனவர்கள் வசித்த ராஜகோபால சுவாமி கோவிலை சுற்றிவுள்ள, தெற்கு வீதி, வடக்கு வீதிகளில் மற்றவர்கள் தற்போது பெரும்பாலும் குடியேறி விட்டார்கள், அவர்கள் வசித்த புராதானமான வீடுகள் பெரும்பாலும் இடிக்கப்பட்டு concrete கட்டிடங்கலாகிவிட்டன, அந்த தெருக்களை இபோதெல்லாம் கடந்து செல்கையில், ஏதோ ஒரு வெறுமையே உணரமுடிகிறது,
அந்த ஆட்சரமான தெருக்கள், நாகரீகத்தை பூசி பொய்யாய் சிரிக்கின்றன.....
குங்குமம் இழந்த சுமங்கலிகளை ஞாபக படுத்துகின்றன......

தலைப்புக்கான விசயத்திற்குள் புகும் முன், இன்னும் பசுமையாய் என் மன ஊற்றில் பெருக்கெடுத்து, சல சலத்து ஓடிகொண்டே இருக்கும் என் நினைவுகளின் ஆற்றில் கொஞ்சம் மூழ்கி, எழுந்து கொள்கிறேன்.....


பெரிய கோவிலின் நான்கு மதில்களையும் சுற்றியுள்ள வீதிகளிலும், பெரிய தெப்ப குளத்தின் நான்கு கரைகளிலும் இருந்த வீதிகளிலும் ஏராளமான பிராமணர்கள் வசித்து வந்தார்கள், ஊரின் மற்ற இடங்களிலும் இருந்தாலும், எங்கள் தெருவிலிருந்து ஒரு 10 நிமிட நடை தூரத்தில் இருந்ததால், மற்ற இடங்களில் இருந்த பிராமணர்களைவிட கோவிலும், அதை சுற்றி இருந்த பிராமணர்களுமே எங்களுக்கு பிரசித்தம்,

என்னுடைய, என் நண்பர்களுடைய 7,8 ஆம் வகுப்பு பருவத்திலிருந்து, கல்லூரி, முதலாமாண்டு பருவம் வரையிலான ( மது, சிகரட்,etc,etc...எல்லாம் அப்போது நாங்கள் பழகி இருக்கவில்லை ) நிகழ்வுகள் பெரிய கோவிலையும், தெப்ப குளம் சார்ந்த இடங்களையும் சுற்றியே அமைந்திருந்தன, பெரிய கோவிலின் பிரமாண்டமும், யானையும், அங்கே பரவி இருக்கும் ஈர பத வாசனையும், வௌவால்களின் எச்சத்தின் நாற்றமும், எங்களுக்கு மிக பிடிதமானவையாகவே இருந்தன, கூடவே மட பள்ளியில் தரப்படும்,புளியோதரையும், தயிர் சாதமும், முறுக்கும், சுண்டலும், எங்களை கிட்ட தட்ட அடிமையாகவே ஆக்கி வைத்திருந்தது......

வீட்டு கட்டுபாடுகளில்லிருந்தும், அங்க போகாத, இங்க போகாத,எனும் பெரியவர்களின் அதட்டல்களில் இருந்தும், விடுபட ஆரம்பித்த எங்கள் 13 ஆம் வயதிலேயே, நெருக்கமாக அறிமுகமாகி இருந்தது பெரியகோவில், புறா,மற்றும் கிளிகளை பிடிக்கவே அங்கே செல்ல ஆரம்பித்தோம், பிறகு பரீட்சை நேரங்களில் புத்தகத்துடன் ஆஜராகி உட்பிரகார மண்டபங்களில் வில்வ மரத்து நிழலில்,அந்த அமைதியான சூழலில் சிலர் படிக்க, மற்றவர்கள் தூங்கிகொண்டோ, வில்வமர காய்ந்த கொட்டைகளை வைத்து Cricket ஆடிகொண்டிருபோம், இபோதுள்ள கட்டுபாடுகள் அப்போது இல்லை....

இதற்கு தோதான மதிய நேரங்களில் அங்கே ஆஜராகி இருப்போம், இந்த பக்கம் செங்கலை வைத்து யானையை தேய்த்து குளிப்பட்டி கொண்டிருப்பார் பாகன் ( இவர் என் கல்லூரி தோழனின் தந்தை ) இதை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி ஆனந்தம்,


அடுத்தடுத்த வருடங்களில் எங்களுடைய கால் பந்தாட்ட குழு ( Maradona Football Club -MFC ) ஆரம்பித்த நாட்களில் கோவிலின் முன் பக்கத்தில் உள்ள யானை மண்டபத்திற்கு எதிர் பக்கமே எங்கள் கால் பந்தாட்ட பயிற்சி களமானது,

மாலை நேரங்களில் பந்துடன் ஆஜராகி, ஆக்ரோசமாக விளையாடிகொண்டிருபோம், ஒரு முறை என் நண்பன் அடித்த பந்து,சாமி கும்பிட வந்த ஒரு ஐயர் மாமி நெஞ்சில பட்டு " அந்த மாமி நீங்க எல்லாம் மார்கழில போயிருவிங்கடா " என்று திட்டிய அந்த வார்த்தை இன்னும் நினைவுகளின் ஊடே இருந்து கொண்டுதான் இருக்கிறது,
என் பதினாறாம் வயதுகளில், நான் சுத்திகிட்டு இருந்த, என்னோட ஆளுன்னு சொல்லிக்கிட்டு அலஞ்ச " சோபனா " ( செக்க செவேல்னு இருப்பா, அவளோட கன்னத்து கற்றை முடியே ஆயிரம் கத சொல்லும், மொத்தத்துல சூப்பர் பிகரு )ஒரு 11 மணி போல குடும்பத்தோட கோவிலுக்கு வந்தா விளையாடி கொண்டிருந்த நானும், அப்பத்தான் முதல் முதலா கோவிலின் கருவறை வரை சென்றேன் ,அவள் ராஜா கோபாலனை தருசிக்க, நான் அவளை தரிசித்து கொண்டிருந்தேன், அவ அப்பா என்ன மொரட்சிக்கிட்டு இருந்தாரு, ஆஹா எத்தனை ரம்மியமான, மனதிலிருந்து நீக்கவே முடியாத நாட்கள் அவை...

பங்குனி மாதம் வந்துட்டாலே நாங்களெல்லாம் பரபரப்பாகிவிடுவோம், ஒரு மாத திருவிழா, தேரோட்டம் என்ன, வெண்ணைதாலி உற்சவம் என்ன, வானவேடிக்கை காட்டும் சூரிய பிறை என்ன, தெப்பம் என்ன, வெட்டும் குதிரை புறப்பாடு என்ன, திருவிழா கடை என்ன, ராட்டினம் என்ன, மரணகிணறு என்ன, வெண்ணை தாலி அன்றைக்கு Free யா நீர் மோரு கடைகிதினு, கடைக்கி, கடை மோரா வாங்கி குடிச்சிபுட்டு, வயித்த புடுங்கி ஆத்து பக்கம் ஓடுறது என்ன,
திருவிழா பாக்க வெயில் தாள வரும் ஐயர் வீட்டு பாவாடை, தாவணி கட்டிய தேவதைகலென்ன, பட்டு புடவைல அம்மன் சிலை மாதிரி செக்க செவேல்னு வரும் ஐயர் வீட்டு மாமிகலென்ன, போச்சி,போச்சி எல்லாமே போச்சி....

இப்போதும் அந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், இந்த பிராமண தேவதைகளின் நடமாட்டம் இல்லாமல் வெறுமை ஆகிவிட்டன....

வேலை நிமிர்த்தமாகவும், தொழில் நிமிர்த்தமாகவும் அவர்கள் பல நாடுகளுக்கும்,பல மாநிலங்களுக்கும் ,வெளி ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டாலும், ராஜகோபாலனையும், மன்னார்குடியையும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அவர்கள் இல்லாத எங்கள் மன்னார்குடி தெய்வீக தன்மையை இழந்து கொண்டிருகிறது என்றே நினைக்கிறேன், அவர்களின் இடபெயர்சி எங்கள் மனதை எதோ செய்கிறது, இந்த பிரிவு வலியை அவர்களும் உணர்ந்தார்களா? தெரியவில்லை.....

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்..........















Dec 16, 2009

வலை பூவின் துர் நாற்றம் , இந்த பிரபல பதிவர்கள்...

தலைப்ப பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே ( அடிசிருக்குமே ) நாத்தம்,

இது ஒரு பதிவல்ல,நானும்,என்னை போன்ற எத்தனையோ சாதாரண,பொதுவான "வலைபூ" வாசகனும் ,இந்த வலைபூ ஞானிகளுக்கு ( நேர்ல கெடச்சா கொலவெறியோட பொரடியில அடிச்சி ) சொல்லனும்னு நினைக்கிற விசயங்களையும்,இவிங்க பண்ற அலும்பு,அராஜகத்தையும் மனசுவிட்டு கொட்டி இருக்கிறேன் ( அவுங்க,இவுங்கன்னு மரியாதையா எழுதனும்னுதான் நினைத்தேன் but மனசு வல்ல ).....

இதுல நல்ல பதிவர்களும், துறைசார்ந்த பதிவர்களும் அடங்கமாட்டாங்க....
இந்த நாயமான கோவத்துக்கு 2 நாளைக்கு முன்பு நடந்த முக்கியமான நிகழ்ச்சிதான் காரணம் அது கடைசில.....

அவிங்கள சொல்லி குத்தமில்ல, என்ன செருப்பாலேயே அடிசிக்கணும்,சரி வேல வெட்டி இல்லையே,கிடைக்கிற நேரத்துல debonairblog,FSIblog,indiansex4u, இன்னு போய் காஞ்சிபுரம் சாமியார் லீலைஎல்லாம் பாத்துட்டு குஜாலா இல்லாம, தமிழ் blogs எல்லாம் படிச்சி,அறிவ வளர்த்துக்கிட்டே பொழுது போக்கலாமேனு நம்பி வந்தேன்.....
இங்க வந்துபாத்தாதான் தெரியிது, ஒரு குங்குமம் புக்க முழுசா படிக்கிறதும், ஜெயா TV Newsa ஒரு மணி நேரம் சலிக்காம பாக்குறதும் ,ஒரு முழு சிம்பு படத்த கஸ்ட் பட்டுக்கிட்டேயாட்சும் பாத்து முடிச்சிறதும் இதவிட பெட்டர்னு.....

இதுக்கெல்லாம் காரணம் இந்த பிரபல பதிவர்கள் தான், அப்படி என்னதான் பண்றாங்க,என்னதான் கூத்து அடிக்கிறாங்க, என்ன என்ன வார்த்தை அடிக்கடி Use பண்ணுவாங்க,எல்லா பிரபல பதிவர்களும் அப்படிதானா,இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அவிங்கள பற்றி ஒரு Definition கீழே....

பிரபல பதிவர் ( சிறுகுறிப்பு )
" இந்த பிரபல பதிவர்னு சொல்லியோ,அல்லது உரிமையோட பெயரை சொல்லியோ, இவர்அவிங்கள பாத்து ( பிரபல ) ம்பாரு,அவரு இவிங்கள பாத்து ( பிரபல ) ம்ம்னு மாத்தி,மாத்தி அவிங்ககுள்ளேயே சொல்லிக்கிவாங்க "
அதில்லாம இவிங்க Post போட்ட 1 நிமிசத்துகுல்லேயே,( அத படிச்சி முடிக்கவே 1/2 மணி நேரம் ஆகும் ) அது இரவானாலும் சரி,பகலானாலும் சரி, vote Counter "18 " Vote காட்டும், அடுத்த 1 மணி நேரத்துல " 25 to 28 " Vote காட்டிகிட்டு,பிரபல இடுகை வரிசைக்கு வந்துரும் ( ஏன் என்றால் இவர் பிரபல பதிவர் ),
அடுத்த முக்கியமான விஷயம், பிரபல sorry ( பிரபலமாக்கப்பட்ட),இடுகையின் பின்னுட்டத்தில், ( Me The First ) என்ற வரலாற்று சிறப்புமிக்க வார்த்தை இடம் பெற்றிருக்கும்... அதிக ஓட்டு எண்ணிக்கையை பாத்துட்டு ஆர்வமா பதிவ திறந்தால், அந்த பிரபல பதிவர் Night அடுச்ச சரக்கு ஒத்துக்காம ( வாந்தி ) எடுத்து வைத்திருப்பர் " .........

இப்பவாச்சும் புரியுதா ? நான் எந்த மாதிரி பிரபல பதிவர்களை பத்தி சொல்றேன்னு....
இவிங்க Approx ஒரு 20 to 25 பேர் இருகாங்க


நல்ல,நடுநிலையான, சுவாரஸ்யமா எழுதுற, தரமான,எங்களை போன்ற பொதுவான வாசகர்கள் Vote போடுற " உண்மையிலே பிரபலமான பதிவர்கள்" ஒரு 10 to 15 பேர் இருகாங்க...உதாரணமா,

கேபிள் சங்கர் Sir..

ஜாக்கி சேகர் Sir...

S.முருகன் ( கவிதை 07 )...

ஆமா " தாமிராவ " எங்க ரொம்பநாளா காணோம் ,இது போல நெறைய பேர் இருகாங்க.....


இப்ப டுபாகூர் பார்டிங்கள பத்தி மேல பேசுவோம் ,இவிங்க அடிகடி Use பண்ற Words, இவிங்க Mentality, etc..etc...இதுல சில விஷயங்கள் மேல சொன்ன உண்மையான பிரபலங்கலோடும் ஒத்து போகும் But குழப்பிக்க கூடாது....




இவிங்க பிரபல பதிவாளரா காட்டிக்க என்ன என்ன வார்த்தை Use பண்ணுவாங்கனு பார்போம்....




1.ஆணி புடுங்குவது ( நீங்க எதுவும் எழுதாம ஆணியே புடுங்கிகிட்டு இருந்திருக்கலாம், சுத்தியலாவது எங்க தலையில விழாம இருக்கும் )




2.பெட்டி தட்டுறது ( Software காரனுன்கலாம்,நாங்கெல்லாம் அறிவு ஜீவிகள் எங்க எழுத்தும் அப்படித்தான் இருக்கும்னு மறைமுகமா சொல்லுரான்கலாம் )




3.தங்கமணி .




4.பின்நவீனத்துவம் ( என்ன எளவோ )




5.மொக்கை ( இது அது மொக்கை பதிவுன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க, என்னமோ இதுக்கு முன்னாடி எழுதுனது எல்லாம் உலக இலக்கியத்துல சேர்க்கப்பட்ட மாறியும், இதுக்கு மேல வார்த்த வல்ல )




6.மீள் பதிவு ( No Comments )




ஆரம்பத்துல இந்த வார்த்தை எல்லாம் படிக்க நல்லாத்தான் இருந்திச்சி,இப்பலாம் இந்த வார்த்தைய கேட்டாலே BP எகிறுது அதும் இவிங்க Use பண்ணும்போது.




சரி இவிங்க Mentality எப்பிடி .....

அது Next.............