Jan 14, 2010

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம்.....


நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம்....விடலாமா, நூல் இல்லைனா பட்டம் விடமுடியாது, ஆனா, வால் இல்லாமா பட்டம் விடலாம்...இங்க குஜராத்ல இப்படி தான் பட்டம் விடுறாங்க....நானும் ட்ரை பண்ணுனேன், டைவு தான் அடிட்சிட்சி....குஜராத்ல இருந்துகிட்டு பட்ட திருவிழாவ பத்தி எழுதலன்னா எப்புடி....

             
நம்ம ஊர்ல பொங்கல், மாதிரி குஜராத்ல பட்ட திருவிழா ( மகர சங்கராந்தி ), இதும் பொங்கல் அன்னைக்குதான் வருது, ஆபீஸ் லீவ் இல்ல, லாஸ் அப் பே நாங்க, பரவா இல்ல போங்கடன்னுட்டேன், வாழ்கைய அனுபவிகிறதவிட ஆபீசா பெருசு...


                                                        

             
இது ஆரம்பிக்கிறதுக்கு ஒரு பதினைந்து நாளைக்கு முன்னாடியே, நம்ம ஊர்ல கரும்பு கடை வர்ற மாதிரி, நெறைய பட்டம் விக்கிற கடையா ஊர்பூரா முளைக்கும்,
வித விதமா, பட்டங்களும், நூல்கண்டுங்களும் விப்பாங்க, அஞ்சி ரூபாய்ல ஆரம்பிச்சி, ஆயிரம் ருபாய் வரைக்கும், வித விதமா, பட்டமும், மாஞ்சா போட்ட நூல்கண்டும் விக்கும்,

            

திருவிழா அன்னைக்கு சாமியா கும்புட்டுட்டு, மாடில ஏற ஆரம்பிச்ச நைட்டு தான் கிழ எறங்குவாங்க, சின்ன கொளந்தைங்கள்ள ஆரம்பிச்சி வயசான தாத்த பாட்டி வரைக்கும் பட்டம் விடுவாங்க, அன்னைக்கு முழுசும் வானத்துல லட்சகணக்கான பட்டங்கள் பறக்கும், சும்மா தேமேன்னு பட்டம் விடுறதில்ல, பட்டத்துக்கு, பட்டம் போட்டி போட்டு டீல் போட்டு   அறுக்குறது, மரம், மட்ட,போஸ்ட் மரம் எல்லாத்துலயும் பட்டமா, மட்டிகெடக்கும், இப்படி அன்னைக்கு முழுசும் ஜாலியா போகும்...........

                                                              
               

அடுத்தநாள் பேப்பர பார்த்த, கொறஞ்சது ஒரு ஐம்பது பேரவுது, பரலோகம்  போயிருப்பாங்க, பட்டம் விடுறேன்னு மாடிலேர்ந்து விழுந்தோ,  வண்டில போறப்ப மாஞ்சா நூல் கழுத்த அறுத்தோ, கரண்டுடுல அடிபட்டோ, அது தனி கொடும....அது மட்டும் இல்ல கிட்ட தட்ட இரண்டாயிரம், கழுகு, புறா மாதிரியான பறவைகள் மாஞ்சா நூலால காயம்படுறதோ, மரணம் அடையிறதோ நடக்குது,இத அறிவுறுத்தி அரசாங்கம் எவ்வளவோ விளம்பரம் பண்ணியும், இந்த மாதிரி மரணங்கள கட்டு படுத்த முடியிறதில்ல....
நீங்களும், மாட்டு பொங்கல்ல, மாடுங்கள்ட்ட, மல்லுகட்டி, முட்டிய, கிட்டிய ஒடட்சிக்காம, நல்ல படியா பொங்கல் கொண்டடுவிங்கன்னு  நம்புறேன்....

இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களுடன்.........தம்பி....



2 comments:

அண்ணாமலையான் said...

interesting.. congrats

தம்பி.... said...

Thank You...Thank you...லீவுக்கு ஊர் பக்கம் போகலையா...

Post a Comment