Feb 4, 2010

நான் அடிச்சா தாங்க மாட்ட....

நான் அடிச்சா தாங்க மாட்ட....நாலு நாளு தூங்க மாட்ட...
பத்தரமா வீடு போயி சேர மாட்ட......

நீங்க அடிச்ச அடியில மூணு பேர் கோமா ஸ்டேஜில இருக்காங்க, ஒருத்தன் இப்பவோ, அப்பவோன்னு இழுத்துகிட்டு கெடக்கான், இவங்கள செக் பண்ணுன டாக்டர் எல்லாம் மெரண்டு போய்ட்டாங்க, இது சாதாரண ஆளு அடிச்ச அடி மாதிரி தெரியல, நாடி, நரம்பு எல்லாம்  ரத்த வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் அடிக்க முடியும்கிறாங்க,
நீங்க யாரு......?உண்மைய சொல்லுங்க  பாம்பேல( சூரத்ல ) என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க......
சொல்லுங்க....சொல்லுங்க.....சொல்லுங்க....
சொல்லுங்க....சொல்லுங்க.....சொல்லுங்க....

இப்படியெல்லாம் விஜய் மாதிரி பாடணும்னும், பாட்சா ரஜினிய அவரோட தம்பி கேக்குற மாதிரி, என்னையும் யாராச்சும் கேட்கனும்னும் உள்ளுக்குள்ள ஆச தான்.....ஆனா அந்த அளவுக்கு, ஒனக்கு ஒர்த்து இல்லாம போச்சேடா கைப்புள்ள....

நிற்க.....

ஒரு பூனை கூட அதுக்கு ஆபத்து வந்தா சீறும், உங்களுக்கு கோபமே வராதா ? நீங்க யாரையும் கை நீட்டி அடிச்சதே இல்லையா ?
ஹாஹ் ஹாஹ் ஹாஹ்.... ஹா ஓ ஹாஹ் ஹாஹ்  ஹா.....

லூசாட நீ ? கேள்வி கேட்டா கிறுக்கன் மாதிரி சிரிக்கிற அப்புடீன்னு நீங்க கேக்குறது புரியிது/ நீங்க கேக்காட்டியும் சொல்லத்தான் போறேன்...

சுஜாதா சார் ஸ்ரீரங்க நாட்களை  பத்தி எழுத்தும் போது அடிக்கடி ஒரு  டீம  பத்தி சொல்லுவாரு தெரியுமா..." அடையவளஞ்சான்" டீம்,   அதே மாதிரி குரூப் தான் எங்க கேங்கு...எல்லாம் வீரம் விளைந்த மதுரை மண்ணின் மைந்தர்கள்...பிழைப்புக்காக அங்கேர்ந்து வந்து ரெண்டு தலைமுறைக்கு முன்பு எங்க தெருவுல குடியேரினவங்க...அடி தடிக்கு அப்பவே எங்க ஊர்ல பேர் போனவுங்க....

தலை முறை,தலை முறையாவே இவங்களுக்கும், எங்க ஊரோட மண்ணின் மைந்தர்களான சில பக்கத்துக்கு கிராமத்தார்களுக்கும், குறிப்பிட்ட சில தெருக்காரர்களுக்கும் பகை உண்டு(எங்க தெருவோடு சேர்த்து, ஒரு அஞ்சி ரவுடி தனம் பண்ணுற தெரு இருக்கு, எல்லா பிரச்சனையும் இவனுங்ககுள்ள தான் ) ....சொத்து பிரட்சனை எல்லாம் இல்ல, கபடி விளையாட போகும்போதோ, திருவிழா,தெப்பம் மாதிரியான விழாக்கல்லையோ ஏற்பட்ட மோதல்கள் தான்...குறிப்பா சொல்லனும்னா நீ பலசாலியா ? நான் பலசாலியா ?இந்த மோதல் தான்.... அந்தந்த கால கட்டத்துல யார் ரவுடீன்னு பேர் எடுக்குறாங்களோ, அவங்களோட வாரிசுகள் இத தொடரும்....இந்த நிமிடம் வரைக்கும் இது தொடருது...ஆனா முன்ன மாதிரி இல்ல, எல்லாம் படிக்க ஆரம்பிட்சதனால நிறையவே மாறிட்டாங்க....இவங்கள அரசியல் லாபத்துக்காக அடி, தடிக்கு உபயோக படுத்தி முன்னேறுன D.M.K / A.D.M.K அரசியல்வாதிங்க எல்லாம் இப்ப பெரிய பதவியில  இருக்காங்க....



என்னோட அஞ்சு  வயசுல நாங்க அந்த தெருவுக்கு குடிமாறி வந்தோம், (அதுக்கு ஒரு காரணம் இருக்கு, இருந்த சொந்த வீடு, நிலம், அம்மாவோட நகை எல்லாத்தையும் வித்து புட்டு நான் ஒன்னாம்கிளாஸ் படிக்கும் போது வெளிநாடு போனவருதான் எங்க அப்பா, நான் டிகிரி முடிச்சி  கிட்ட தட்ட 21 வருஷம் கழிச்சி  நான்தான் அங்க   போய் அவர அனுப்பி வச்சேன்,அப்பத்தான் வெவரம் தெரிஞ்சி அவர முதல் முறையா பார்த்தேன், அப்பா இருந்தும், இல்லாத மாதிரி வளர்ந்த அந்த சோகம் எனக்கு இன்னும் இருக்கு,அவர சொல்லியும் குத்தமில்ல,மூணு பொண்ணுங்கள கரையேத்தணும்,அங்க அனுப்புன ஏஜென்ட்   நல்ல வேலைன்னு சொல்லி ஏமாத்திட்டான்,
அம்மாவும்,பாட்டியும், எங்க தாய் மாமனும் தான் எங்க 5 பேரையும்  கஷ்ட பட்டு வளர்த்தாங்க,
இந்தியா  வந்த 2 மாசத்துல மேல போயிட்டாரு, எல்லாம் விதி இத விடுங்க சொந்த கத,சோக கத,ஏன்னா ஒன்னு, இங்க இறக்கி வச்சதுல கொஞ்சம் மன பாரம் கொறஞ்ச
மாதிரி இருக்கு) நான் ஆரம்பத்துல எங்க வயசு பசங்ககுள்ள  எந்த போட்டியோ , சண்டையோ அவங்க கூட தான், நாங்க ஒரு குரூப்பு, அவனுங்க ஒரு குரூப்பு, அப்பறம் போக,போக எல்லாம் ஒண்ணா சேர்ந்தாட்சி...

சேர்ந்தாட்சின்னு சொல்லுறத விட கலந்தாட்சின்னு சொல்லலாம், எங்க வீட்டுக்கு வர்றவுங்க எங்க அம்மாகிட்டயே, என்னமா அந்த தெரு பையன் உங்க வீட்டுகுள்லேர்ந்து வர்றான்னு கேப்பாங்க, எங்க அம்மாவும் இவன்தான் என்னோட ரெண்டாவது பையன்னு பொறுப்பா அறிமுகப்படுத்தும், அதுக்கு இன்னொரு காரணம், எங்க அஞ்சி பேர்ல நான் மட்டும் தான்,சும்மா தக, தகன்னு எம்.ஜி.ஆர் கலர்ல இருப்பேன், ( கோடீஸ்வரனா ஆகி முதல்ல மைகேல் ஜாக்சன் மாதிரி கலர மாத்தணும்னு ஒரு திட்டம் இருக்கு பாப்போம் )

எங்க வயசுல எங்க குரூப்புக்கு தலைமை ஏற்றது, போன பதிவுல குரூன்கிற நண்பன் காயத்திரியோட நம்பர் குடுத்தான்னு சொன்னேன்ல அவனோட அண்ணன், அவங்க அப்பா பெரிய சாராய வியாபாரி... சொல்லவா வேணும்...

அடையவளஞ்சான் தெருவுல இந்த கைப்புள்ளயும்  இருகிருந்ததுனால ( பில்டிங் ஸ்ட்ராங்கவும்,பேஸ்மெண்டு வீக்காவும் இருந்த
என்னோட வீரத்த பத்தி எனக்கு தெரியும், எதிரிங்களுக்கு தெரியாதே  ), ஒரு பெனிபிட் இருந்திச்சி , சினிமா தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட், கடைதெரு, திருவிழா,ஸ்கூல்,காலேஜ்,கிரிகெட் மேட்ச், இந்த மாதிரி எங்க போனாலும் ஒரு  மரியாதயும்,முன்னுரிமையும்  கிடைத்தது,அது போலியா இருந்தாலும் அந்த வயசுல அது ஒரு கிக்கா இருந்தது, இத நம்பி சோப்ளாங்கி பக்கத்துக்கு தெரு பசங்க எல்லாம் எங்க கிட்ட பஞ்சாயத்துக்கு வருவாங்க....ரெண்டு மூணு காதல் ஜோடிய சேர்த்து வச்சிருக்கோம்..இந்த மாதிரி நெறைய பேரோட வைத்தெரிட்சல கொட்டிக்கிட்டோம்....

பெனிபிட் மட்டுமா இருந்திச்சி,இனிமே தான் டெரர்ரே இருக்கு, இவனுங்க கூடவோ, தனியாவோ, ஒரு சினிமாவுக்கோ,கோவிலுக்கோ,திருவிழா,தேரு,தெப்பம், எங்கயும் போக முடியாது,எங்க போனாலும் சண்ட, சண்ட, எங்க ஊர்ல இருந்த, நாலு தியேட்டர்ல இப்ப ஒன்னே,ஒன்னு தான் இருக்கு, அதும் இத்து போன தியேட்டர், பாக்கி எல்லாம் மூடிட்டாங்க, அதுக்கு காரணமே இந்த அஞ்சி தெருகர்ரனுங்க தான்,இதுல என்னோட நிலைமை தான் ரொம்ப மோசம், புலி கூட்டத்துல மாட்டுன எலி நிலைமைதான் எனக்கு, அத இவனுங்க கிட்டயும் காட்டிக்க முடியாது, மான பிரச்சனை , அந்த கெத்த இன்னைக்கு  வரைக்கும் நான் மெயிண்டன் பண்ணிக்கிட்டு வர்றதுக்கு காரணமா ஒரு சம்பவம் நடந்திச்சி அது அப்பறம் ,

அதுக்கு முன்னாடி, சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு என்னோட நண்பர்கள்  முன்னாடி உதார் உட்டுகிட்டு திரிஞ்ச இந்த கைப்புள்ள பட்ட பாட்ட கொஞ்சம் தெரிஞ்சிகாங்க.....குருன்னு சொன்னல்ல,  அவன தான்  உண்மையான கைப்புள்ளன்னு சொல்லலாம், எல்லா பிரச்சனைக்கும் இவன் தான் காரணமா இருப்பான்,இவன பார்த்தாலே எங்க எதிரிங்களுக்கு அடிக்கணும் போல தோணும் போல , அதனால இவன் அடி வாங்காத தெருவே இல்லன்னு சொல்லலாம், இப்ப சமீபத்துல கூட ஒரு பிரச்சனைல,எங்க எதிரிங்க நெஞ்சிலேயே மிதிட்சிருக்கானுங்க, இதையும் அவன்தான் போன் போட்டு சிரிச்சிகிட்டே சொன்னான், திரும்ப ஆள தெரட்டிட்டு போய் பதிலடி குடுத்துருவான்,அது வேற விஷயம்...இதுல எனக்கு என்ன பிரச்சனைனா,அவன் கிட்ட தட்ட என்னோட உயரம், என்னோட கலரு பின்பக்கதிலேர்ந்து பார்த்தா அடையாளமே கண்டு பிடிக்க முடியாது, இப்ப சொல்லுங்க அப்பாவியான நான் என்னா பாடு பட்டுருப்பேன்,எங்க வெளியில போனாலும், திரும்பி, திரும்பி பாத்துக்குவேன்,அவன்னு நெனைச்சி எவனாவுது பொடனியில அடிச்சி மூளைய கலக்கிட்டானா....இது கூட பரவா இல்லங்க....

குரூப்ப உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும் போது திடீர்னு எவனாச்சும் வருவான், கெளம்புங்கடா,பார்ல நம்ம பசங்கள அந்த தெருகாரனுங்க 
அடிட்சிபுட்டானுன்கலாம்,இன்னும் அங்க தான் இருக்கானுன்கலாம்,அப்புடீன்னு 
சொல்லிக்கிட்டு எவனாவுது வருவான்  பாருங்க, எனக்கு குலையே நடுங்கிடும்...எஸ்கேப் ஆகவும்  முடியாது,  இந்த மாதிரி சமயத்தில, நீங்க போய்கிட்டே இருங்க,அம்மா ரேசன் கடைல மண்னென்னை ( கெரசின் ) வாங்கி வச்சிக்கிட்டு நிக்குதாம், அத வாங்கிட்டு வந்து வீட்ல குடுத்துட்டு உடனே வர்றேன்னு சொல்லிட்டு தப்புட்சிருவேன், கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள இருந்துட்டு வெளியில வந்தா , அதுக்குள்ள பிரச்சனை முடிஞ்சிருக்கும், கதை மட்டும் கேட்டுகிறது, அந்த ஆனந்து பய இருந்தானா, அவன போட்டிங்களா, இல்லையா, அவன ஒருநாளைக்கு நாயடி அடிக்கணும் பங்காளி, ச்சே நான் தான் வரமுடியலைன்னு...ஒரு பிட்ட போட்டம்ன்னா நம்பிருவாங்க...

இதே ஆன்தி ஸ்பாட் பிரச்சனைன்ன, அதோகதி தான், கூடுமானவரை, ரெண்டு பக்கமும் எதாவது பேசி சமாதானம் பண்ணிவட்சிடுவேன் , அடிதடில எறங்கிட்டானுங்கன்னா, எஸ்கேப் ஆகிடுடா கைபுள்ளே தான், திரும்ப வந்து நீங்க இங்க சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க, அந்த குமாரு பய நம்ம பேட்ட தூக்கிகிட்டு, இந்த பக்கமா ஓடுறான்...நானும் மணியும் தான் ( அவனும் என்னோட கேரக்ட்டர் தான் )அவன துரத்தி புடிச்சி, நாலு சாத்து,சாத்தி புடுங்கிகிட்டு வர்றோம், நான் வேற பேட்டால அவன் மண்டைல அடிச்சதுல, மண்ட உடைஞ்சி ரத்தம் ஊத்துதுடா, வாங்கடா போலீஸ் வர்றதுகுள்ள ஓடிடுவோம்னு ஒரு பிட்ட போட்டுட்டு எஸ்கேப்...எப்பூடி.....

இதுக்கே இப்புடின்னா, பஞ்சாயத்து பேசுறதுன்னு ஒன்னு இருக்கு, அது இதவிட டெரரா இருக்கும், அவங்க தெரு பசங்களையே அடிட்சிபுட்டு, சில நேரம்,அவங்க தெரு பெரிய தலைங்க பிரச்சனைய பெருசாக்க வேணாமேன்னு பஞ்சாயத்து பேச, அவங்க தெருவுக்கே  கூப்பிட்டு அனுப்புங்க....( சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள்ளேயே வச்சி கொலை நடக்குது, ) அடி வாங்குனவணுவ என்னா கொலை வெறியோட இருப்பானுங்க,  இவனுங்கள நம்பி அங்க போக முடியுமா? இதுக்கு  தைரியசாலியான , என்னையும் கூப்பிடுவானுங்க, போவான இந்த கைப்புள்ள, இது பொதுவா நைட்டுல தான் நடக்கும்கிறதனால, இல்ல பங்காளி நாளைக்கு செமஸ்டர், படிக்கணும்னு சொல்லிட்டு வேற என்னா எஸ்கேப்.....

இதவிட இன்னொரு கூத்து, ஏதாவது பிரச்சனைய கேள்வி பட்டுட்டு, எங்க அம்மா, குடும்ப கதையெல்லாம் சொல்லி,ரொம்ப சீரியஸா  அட்வைஸ் பண்ணும், இவனும் தாம்மா போயிருப்பான்னு என் தங்கச்சி ஏத்திவிடுவா....எனக்கு சிப்பு,சிப்பா வரும், டெரரா முகத்த வச்சிகிட்டு, சரிம்மா இனிமேல் போவல ஓகே...சோற போடுங்கிறது...
எப்புடி நம்ப வட்சிருகேன் பாத்திங்களா....

இந்த தென்னாலிய,என்னோட பிரண்டுங்க இன்னும்,  பெரிய ரவுடி,தைரியசாலீன்னு நம்பிகிட்டு இருக்குறதுக்கு சாட்சியா, நான் வெளிநாட்டுக்கு போறதுக்கு கொஞ்ச ஒரு நாளைக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்திச்சி.....

எங்க தெருவுக்கு அடுத்து ஒரு நோஞ்சான் தெரு,எங்க தெருலேர்ந்து ஒரு 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்கும், எங்கள கண்டா, ரொம்ப,ரொம்ப  பயப்படுற  ஒரு தெரு, நான்கூட  நெஞ்சநிமித்திக்கிட்டு, சும்மா கம்பீரமா நடந்து போவேன்னா பாத்துகங்க, எங்க கேங்குல இருக்க நண்பன் ஒருத்தன்,அந்த தெருவுல குடியிருந்தான், ஒருநாள் நைட்டு நாங்க ஜாலியா பேசிகிட்டு உட்கார்ந்து இருக்கப்ப, டேய் என்ன, எங்க எதுத்த வீட்டு டைலர் ரவியும், இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து அடிட்சிபுட்டாங்கடான்னு சொல்லிக்கிட்டு ஓடி வர்றான், ஏதோ சாதாரண பிரச்சனை, எங்க நண்பர் ஓவரா ஸீன போட்டுட்டாரு போல, மூணு பேரு சேர்ந்து ஒரு காட்டு, காட்டிட்டாங்க.......

நாங்களும், ( சத்தியமா நானும் தாங்க, அந்த தெருவோட வெயிட்டு எங்களுக்கு தெரியுமுள்ள )கைல கிடைச்சத எடுத்துகிட்டு அந்த தெருவுக்கு ஓடுறோம்,நானும் ஒரு ஒரு அடி நீளமுள்ள  ஒரு ஹோஸ்பைப்ப  (அதோட முனைல ஒரு இரும்பு நட்டு மாட்டி இருந்தது லாரிக்கு யூஸ் பண்ணுறதுன்னு நெனைக்கிறேன் ) எடுத்துகிட்டு ஓடுனேன்...

எங்க பசங்க டைலர் ரவிய அடிக்கிறானுங்க ,  (நான் சண்ட நடக்குற இடத்துலேர்ந்து ஒரு 25 மீட்டர் தூரத்துல நிக்கிறேன்,எனக்கு அப்பவும் எவனையும் அடிக்கிற மூடு இல்ல..) அவன் ஒரு ஆறு அடி இருப்பான், அவனும்,இன்னொருத்தனும் திரும்ப அடிக்கிறானுங்க சாது மிரண்டுட்டு போல, எங்க பசங்க ஒரு பத்து பேரு அவனுங்க மூணு பேரு, சுத்தி நிக்கிற மத்தவுங்க சண்டைய விளக்கிவிடுறாங்க ... இதுல மூணாவது ஆளு தப்பிச்சி அங்க நிக்கிற மில்டரி ரவின்கிற என் நண்பன்கிட்டேர்ந்து எஸ்கேப் ஆகி எனக்கு எதுத்த மாதிரி ஓடி வர்றான் ( அவன நல்லா தெரியும் அப்புராணி பய - சரி ஓடி தப்பிச்சி போகட்டும்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன், )அவன அடிடா அத்தான்னு, மில்டரி ரவி சொன்னதுதான் தாமதம், என்னையும் அறியாம, ஹோஸ் பைப்பால மடார்னு அவன் நெஞ்சில அடிச்சேன், அங்கேயே சுருண்டு விழுந்துட்டான்,எந்திரிக்கவே இல்ல, பைப்பு முனைல உள்ள நட்ட தொட்டு பாக்குறேன்,ரத்தம் மாதிரி பிசு,பிசுன்னு ஏதோ கைல ஒட்டுது, இருட்ட இருந்ததால சரியா தெரியல..

எனக்கு உயிரே, போயிட்டு..... செத்துட்டான்,நம்ம லைப் காலின்னு  நினைச்சிகிட்டு அதிர்ச்சில நிக்கிறேன் ....

இந்த சமயத்துல, பேரன அடிக்கிரானுங்கலேன்னு தடுக்க போன டைலர் ரவியோட பாட்டி, தள்ளு முள்ளுள, எவனோ அது மேல மோத மயக்கம் போட்டு கிழே விழுக... பசங்க பாட்டி செத்து போச்சின்னு நினைக்க....அந்த நேரம் எவனோ போலீஸ் வருதுன்னு சொல்ல, ஏற்கனவே பயத்துல நிக்கிற நானும்,பசங்களும் எஸ்கேப்.....
எங்க போனாங்கன்னும் தெரியல....

பக்கத்துல இருந்த தாமரை குளத்துக்குள்ள, ஹோச தூக்கி போட்டுட்டு, ( கை ரேகை பதிஞ்சிருக்குமுள்ள ) பின் பக்கமா சுத்தி வீட்டுக்கு போய் படுத்துட்டேன், தூக்கமே வரல, இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து பிடிச்சுட்டு போகபோகுதுன்னு பயம், எப்படா விடியும்னு காத்திருந்தேன்...காலைல பத்து மணியாகியும் வெளிய போகல....அவன் செத்து போயிருந்தா இந்நேரம் எவனாவது வந்து சொல்லிருப்பானுங்கல்லன்னு யோசிச்சிகிட்டு, பதுங்கி பதுங்கி தெரு பக்கம் போறேன்....நான் அடிட்சனே அவன் சீட்டி அடிச்சிகிட்டு சைக்கிள்ல வேலைக்கு போய்கிட்டு இருக்கான்.....அப்பத்தான் உயிரே வந்திச்சி, என்னடா ஆட்சின்னு என் நண்பர்களுகிட்ட கேட்டா,

நீ நைட்டு எங்கடா போன, போலீஸ் எல்லாம் வரல, எவனோ புரளிய கிளப்பிருக்காண்டா, அதுக்கு அப்பறம் எங்க அண்ணன் போய் சமாதானம் பேசிட்டு வந்த பிறகு, நாங்க போய் தண்ணி அடிச்சம்டா அப்புடீன்னான் குரு....

நான் அடிச்சி ஒருத்தன் சுருண்டு விழுந்தத மில்டரி ரவி எல்லா பசங்ககிட்டையும் சொல்லிட்டாம் போல, என்னடா அவன இப்புடி அடிச்சிட்ட, செத்து போயிருந்தா என்னடா பன்னிருப்பேன்னு கேட்டானுங்க, எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு வழக்கம் போல உதார் உட்டேன் நம்ப்பிட்டானுங்க....

இது நடந்து ஒரு மாசம் போல இருக்கும்,எங்கிட்ட அடி வாங்குன அந்த அப்பாவிய பார்த்து , நெஞ்சில அடிச்சதுக்கு சாரி நண்பான்னேன்...நீ எங்க என் நெஞ்சில அடிச்ச, நான் சட்டை பையில வச்சிருந்த மணி பர்சுல தானடா அடிச்ச அப்புடீன்னான்....
அப்பறம் ஏண்டா, சுருண்டு விழுந்தேன்னு கேட்டேன், இல்லேன்னா நீ சும்மாவா விட்டுருப்பே...அப்புடீன்னான்.....எனக்கு  சிப்பு,சிப்பா வந்திச்சி......

By..........தம்பி..........














10 comments:

gulf-tamilan said...

ம்.கைபுள்ளெ பேர் பொருத்தம்தான். :)))

தம்பி.... said...

Thank U

மதார் said...

இவரும் ரௌடிதான் , எல்லாரும் ஒத்துக்குங்க. இல்லனா நம்ம கூட சண்ட போட்டே கமெண்ட்ஸ் ஏத்திடுவாறு, கூடவே சக்தியும் கூட்டு வருவாரு . பார்த்து சூதானமா இருங்கப்பு .

தம்பி.... said...

வாங்கம்மா....வாங்க.....
எல்லோருடைய பதிவுக்கும், கருத்து சொல்லி பின்னூட்டம் இடுவதால் உங்களுக்கு " கருத்தம்மா "
என்ற பட்டதை என் சார்பாகவும் நண்பர் சக்தி அவர்களின் சார்பாகவும் வழங்குகிறேன்.....
சரி இந்த பதிவு ஏம்மா போனியாகள...கொஞ்சம் சொல்லுங்க

மதார் said...

எனக்கு எப்போ தூக்கம் வருதோ அப்போ பதில் சொல்றேன் . சக்திக்கும் சொல்லிடுங்க .

துபாய் ராஜா said...

பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய ரவுடி தான் நீங்க.... :))

தம்பி.... said...

நீங்களாவது ஒத்துகிட்டீங்களே.....ராஜா..

Unknown said...

ஒரு வடிவேலு போதும்னு நினைக்கிறேன்

தம்பி.... said...

வாங்க சக்தி, மதார் ஒங்கள ரொம்ப கேட்டாங்க.....மறக்காம ஒரு ஹாய் சொல்லிருங்க

தம்பி.... said...

மதார் சக்தி வந்துட்டாரு, இப்ப மோதி பார்ப்போமா...

Post a Comment